Saturday, January 28, 2012

மாநகர சபை முதல்வரின் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!




யாழ். மாநகர சபை முதல்வரின் போக்கைக் கண்டித்து மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டமும் இவ் ஆண்டின் முதலாவதுமான கூட்டம் இன்று காலை மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது, மாநகரசபை முதல்வரின் சர்வாதிகார, ஜனநாயக விரோத நிர்வாகப் போக்கை கண்டித்தும் பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அத்துடன் மாநகரசபையின் சுகாதாரக்குழு, நிதிக்குழு ஆகியனவற்றில் மோசடி செய்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட 10 பேர் மாநகர சபை அமர்வைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment