Friday, January 27, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்களுக்கு தண்டனை


 

சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 42 பேருக்கு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால கடூழிய தண்டனை விதித்துள்ளது.
குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினாலேயே குறித்த நபர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தலா 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் நீர்கொழும்பு கடற் பகுதியிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணம் செய்ய முயற்சித்த நபர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலியினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment