Friday, February 17, 2012

தந்தையுடன் ஒரு பேட்டி?



பிரெஞ்சு காவல்துறையினர் நோர்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் 78 பேரை கொலை செய்த ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரீவிக் என்பவனின் தந்தை ஜென்ஸ் பிரீவிக்கை பேட்டியெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பாரிஸ் நகரத்தில் ஆண்டெர்ஸ் பிரீவிக்கின் கொலை வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தக் கொலையாளியின் மனநல ஆய்விற்கு அவனது குடும்பப் பின்னணியும் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் தேவைப்படுகிறது.
இவனது தந்தையான ஜென்ஸ் பிரீவிக் முன்னாள் அரசு அதிகாரி. இப்போது தெற்கு ஃபிரான்சில் வசித்து வருகிறார்.
இவர் தன் மகன் ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே அவனை விட்டுப் பிரிந்துவிட்டார். இதனால் இவருடைய சாட்சி இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது.
தந்தையைப் பிரிந்து தனியாக வளர்ந்ததற்கும், கூட்டுக் கொலையில் ஈடுபட்டதற்கும் தொடர்புண்டா என்று நோர்வே காவல்துறையினர் அறிய விரும்புகின்றனர்.
இதுவரை தன் மகன் தொடர்பான விடயங்களில் தலையிட விரும்பாத ஜென்ஸ் பிரீவிக் நோர்வே திரும்பவோ பிரான்சில் உள்ள அதன் தூதரகத்திற்குச் செல்லவோ மறுத்துவந்தார்.
அதனால் நோர்வே அதிகாரிகள் முன்னிலையில் பிரான்சில் வைத்தே அவரைப் பேட்டியெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment