Saturday, March 17, 2012

இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்



ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா பஸ்ளிவாசல் முன்பாக, முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று வவுனியா பள்ளிவாசலின் முன்பாக திரண்ட முஸ்லிம் மக்கள், “உறுதியான சமாதானத்தைப் பெற்றத் தந்த மகிந்தவின் கரத்தைப் பலப்படுத்துவோம்.” என பல வாசகங்கள் உள்ளடக்கிய அட்டைகளை தாங்கியவாறு கோஷமிட்டனர்.
மேலும், “எங்களுடைய நாட்டை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த தாய் நாட்டிற்காக குரல் கொடுப்பதற்காக எப்போதும் நாங்கள் தயார் நிலையில் இருக்கின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ஜனாப் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இவ்வார்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் உட்பட வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், மௌலவிமார் என பலர் கலந்துகொண்டனர்.
Thanks: Tamil

No comments:

Post a Comment