Sunday, March 25, 2012

வட்டி பற்றிய இஸ்லாத்தின் பார்வை..



இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்றபேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றேஉணரப்படவில்லைஇவற்றில் சினிமாவட்டிவரதட்சனைபோன்றவை முதலிடம் வகிக்கின்றனஇன்னும் சில தீமைகள்தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ளபேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம்செய்துள்ளதுஅவற்றுள் முக்கியமானவை லாட்டரிகுதிரைப்பந்தயம்விபச்சாரம்குடி போன்றவையாகும்இத்தகையஅரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத்தெரிகின்றது

    சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும்பேராசைக்காரர்களையும்சகோதரமனப்பான்மை அற்றவர்களையும்பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும்உணருவதில்லை ஏன்

    இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதேஇதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும்பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும்ஆனால் இறைமறையும்நபி மொழியும் இதைமிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

    ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:
         يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
    ஈமான் கொண்டோரைஇரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்)தின்னாதீர்கள்இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்)வெற்றியடைவீர்கள். (3:130)
    الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
   யார் வட்டி(வாங்கித்தின்றார்களோஅவர்கள் (மறுமையில்)  ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன்பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள்;  இதற்குக்காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதேஎன்று கூறியதினாலேயாம்;அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கிவட்டியை ஹராமாக்கியிருக்கிறான்ஆயினும் யார் தன்இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோஅவனுக்குமுன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது;ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்திரும்புகிறார்களோ அவர்கள்நரகவாசிகள் ஆவார்கள்அவர்கள் அதில் என்றென்றும்  தங்கிவிடுவார்கள். (2:275)
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ   ஈமான் கொண்டவர்களேநீங்கள் உண்மையான மூஃமின்களாகஇருந்தால்அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கிஎஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)
    فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ
    இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும்அவனுடையதூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டதுநீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து)மீண்டுவிட்டால்உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்குநீங்கள்அநியாயம் செய்யாதீர்கள்நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

    உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதைவட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களாஉணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்துஅல்லாஹ் கூறுகிறான்நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்துமீண்டுவிட்டால்உங்கள் பொருள்களின்அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்குநீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்நீங்களும்அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

    மேலும் பலர் வட்டியும்வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறியவசனம் இக்காலத்திற்கு பொருந்தாதுஅது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான்குறிக்கும்அதுவும் இரட்டிப்பு (கூட்டுவட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீதுகொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம்கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியைஅடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

    வட்டி வங்குவதுவட்டி கொடுப்பதுவட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரைநபி(ஸல்அவர்கள் சபித்துள்ளார்கள்அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரேஅறிவிப்பாளர்:ஜாபிர்(ரழிஆதாரம்முஸ்லிம்திர்மிதீமுஸ்னத் அஹ்மத்
    இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை அனுபவிப்பதற்கோ விட மாட்டான்அவர்கள்
1.  குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்அபூஹுரைரா(ரழிஆதாரம்ஹாக்கிம்)

    வட்டி என்றால் என்ன?
    بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ   
    தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர்அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம்அருளினோம். (16:44)

    மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம்பெற்ற நபி(ஸல்அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம்பலவித கொடுக்கல்வாங்கலில்  நபி(ஸல்அவர்கள் இவையெல்லாம் கூடும்இவையெல்லாம் வட்டி (ஹராம்கூடாதுஎன்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில்கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

     வட்டி எல்லாம் தவணை முறையில்தான்கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழநூல்புகாரிமுஸ்லிம்

    தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும்வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும்மணிக்கோதுமையைமணிக்கோதுமைக்கு பதிலாகவும்,  தொலிக்கோதுமையை  தொலிக்கோதுமைக்கு பதிலாகவும்,பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும்உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில்சமதரத்தில்கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள்இவ்வினங்கள்  பேதப்படுமானால் கரத்திற்கு கரம்நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள்எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லதுகூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும்விற்பவரும் வாங்குபவரும்சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்முஸ்லிம்திர்மிதி)

    நபி (ஸல்அவர்களிடம் பிலால் (ரழிஅவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தைகொண்டு வந்தனர்அதற்கு நபி(ஸல்அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்ததுஎன்றுவினவினர்அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்ததுஅதில் நான்இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன்என்றார்கள்அப்பொழுது நபி(ஸல்அவர்கள் இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்கவட்டிஇவ்வாறு செய்யாதீர்இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமதுபேரிச்சம் பழத்தைவிற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராகஎன்று கூறினார்கள். (அபூ ஸயீது  நூல்புகாரி,முஸ்லிம்முஸ்னத் அஹ்மத்)

    நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும்உண்மையில்அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதிநஸயீ)

    வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவேஎழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

    நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமதுசம்பாத்தியம் ஹலாலானதாஹராமானதாமுறையானதாமுறையற்றதாஎன்பனவற்றைப்பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழிபுகாரி)

    வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்:இப்னுமஸ்வூத்(ரழிஆதாரம்:முஸ்லிம்அபூதாவூத்திர்மிதீ

    மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும்அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும்இருக்கமாட்டார்கள்அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்அபூஹுரைரா(ரழிஆதாரம்அபூதாவூத்,நஸயீ

  இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாதுஅப்படிவாழமுற்பட்டால் நாமும்  நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர  வீழ்ச்சியை சந்திக்கநேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லைஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும்எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ  அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்அழித்து விடுவான்இன்னும்தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)
    நபி(ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள்இறைவன் எனது உள்ளத்தில் போட்டான்நிச்சயமாக எந்தநபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க  முடியாதுஆகவேஅல்லாஹ்வைபயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமானசிறந்த முறையைக்கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழிநூல்பைஹகீஸ்ரஹுஸ்ஸுன்னா)
   
எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும்இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாதுஅடையுமுன் யாரும்மரணிக்க முடியாதுஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம்நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தேஅடையும் என்ற நபி(ஸல்அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

No comments:

Post a Comment