Sunday, April 15, 2012

நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர்கள்: மஹிந்த ஹத்துருசிங்க



வடக்கில் உள்ள தமிழர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமாறு யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஈட்டப்பட்ட சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். மாறாக கஸ்டப்பட்டு வென்றெடுத்த சமாதானத்தை சீர்குலைக்கும் முனைப்புக்களில் ஈடுபடக் கூடாது என கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கைகளினால், சகல இன சமூக மக்களும் நெருக்கடிகளை எதிர் நோக்கியதாகவும், கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒரே தேச மக்களாக அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
Tamilwin

No comments:

Post a Comment