Saturday, April 14, 2012

குணரட்ணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைது செய்ய வேண்டும்!- எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை!


 [ வீரகேசரி ]
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடுகடத்தப்பட்ட முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரட்ணத்தை கைதுசெய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளைக் கோரியுள்ளார்.
குணரட்ணம் பிழையான தகவல்களை வழங்கி பிரயாணம் மேற்கொண்டுள்ளதால் அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் அவுஸ்திரேலியாவில் பிரஜா உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக பல மோசடிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilwin

No comments:

Post a Comment