Thursday, July 12, 2012

பர்மாவில் முஸ்லிம்களின் படுகொலை.


எவ்வாறு நிகழ்ந்த்து?சில தகவல்கள்.
ரோகிங்னியா மாநிலத்தில் துங்கொக் எனும் கிராமத்தில் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் ராணுவத்தினரால் 03/06/2012 இல் பஸ் வண்டியொன்றிலிருந்து இறக்கப்பட்டு கொல்லப்பட்ட்தற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக மயொமா கயண்டன் கிராமத்தில் அமைதியான முறையில் சென்றுகொண்டிருந்த 500 இளைஞர்களைக்கொண்ட ஊர்வலத்தின் மீது ராணுவம் துப்பாக்கிபிரயோகம் செய்ததன் மூலம் பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் 08/06/2012 இல் ஆரம்பமாகியது..

அந்நாட்டின் உத்த்யோகபூர்வசெய்தி நிருவனம், மேற்படிகொலைகள் அரகான் மாநிலத்தின் மேற்குப்பகுதியில் பங்களாதேஸ் இன் எல்லைப்புரத்தில் இடம்பெற்ற ஒரு கற்பழிப்பு,கொலைக்கான பழிவாங்கள் என்று குறிப்பிட்டது.மேற்படி கொல்லப்பட்ட 10 பேரும் தென்அரகன் பகுதியிலுள்ள தந்த்வே எனுமிடத்திலுள்ள தெஸ்டா பள்ளிவாசலிலிருந்து ரன்கூன் நோக்கி யாத்திரையொன்றை (தப்லிஹ்)மேற்கொண்டிருந்தபோது வழியில் நூற்றுக்கணக்கான ரோகிங்னியா பெளத்தர்களால் மறிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட்தாக தந்த்வேயில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த யாத்திரிகரொருவர் குறிப்பிட்டார் .


ரோகிங்னியா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை அதிகமாக பிரதிநிதிப்படுத்தும் அபிவிருத்திற்கான தேசிய ஜனநாயகக்கட்சியினைச்செர்ந்தஅபூ தாஹா’’இவர்கள் மிருகங்களை விடவும் கெவலமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள்’’ எனத்தெரிவித்துள்ளார். ரோகிங்னியாவில் 800,000 முஸ்லிம்கள் வாழ்வதாகவும்,இவர்கள் தான் இன்று உலகிலுள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் என ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான நிருவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 


பர்மா அரசாங்கம் ரோகிங்னியா முஸ்லிம்களை நாட்டின் பிரஜைகளாக கருதுவதில்லை,அந்நாட்டின் பெரும்பான்மை பெளத்தமக்களும் அவர்களை வெருக்கின்றனர்.பிறப்பின் மூலம் தாம் நீண்ட காலம் பர்மாவில் வாழ்வதாக்கூறி தமக்கு அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என ரோகிங்னியா முஸ்லிம்கள் போராடிவருகின்றனர்.ஆனால் அவர்கள் பங்களாதேக்ஷ் நாட்டிலிருந்து வந்து குடியேரிய சட்டவிரோத குடிகள் எனக்கூறி, அந்நாட்டு அரசாங்கம் அந்நாட்டுபிரஜைகளுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு கொடுக்க மறுக்கின்றது..மனித உரிமைகள் நிருவனத்தின் விசேட செய்தியாளர் ,Toms Ojea Quintana ,அண்மையில் மியன்மாருக்கு விஜயம் செய்தபோது கலவரங்களுக்கான அடிப்படைக் காரணம் ‘’ நீண்டகாலமாக ரோகிங்னியா முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள்,பிரஜா உரிமை, நடமாடுவதற்கான உரிமை போன்றன மறுக்கப்படுகின்றமையே’’ எனக்குறிப்பிட்டார்.


கடந்தவாரம் லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூ கீ ‘’கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பிரஜைகள் அல்ல,நிரந்தர வதிவாளர்கள்’’ எனறேகுறிப்பிட்டார்.மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இன்ங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுனுக்கமாக கையாளாவேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார்.

Date: 5 Jul 2012

By Ahmed J Versi
http//Kasmirwatch.com/ Human Rights

No comments:

Post a Comment