Tuesday, January 24, 2012

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை ?




ரணில் விக்ரமசிங்க நரேந்திர மோடி சந்திப்பு:-இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் நீண்டநேரம் இந்த பேச்சுதவார்த்தை நடைபெற்றுள்ளது. இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்குவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாகவும் இதன் போது பேசப்பட்டுள்ளது.
 அதேவேளை சந்திப்பின் போது, குஜராத் முதலமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ரணில் கேட்டுக்கொண்டுள்ளார். ஜே.ஆர். ஜயவர்தன அரசியல் விஞ்ஞான பீடத்தில் உரையாற்றுவதற்காக இந்த அழைப்பை ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்ததுடன், அதனை நரேந்திரமோடி ஏற்றுக்கொண்டுள்ளார். நரேந்திரமோடி பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், ரணில் விக்ரமசிங்க அவரை சந்தித்துள்ளமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment