Sunday, January 22, 2012

யாழில் பாடசாலை மாணவி தற்கொலை - தந்தை காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில்



[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 07:05.27 AM GMT ]
யாழ்.கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கலையொளி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்த மாணவியை அவரது தந்தை உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதித்த போதிலும், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே நேற்று இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் ஆவார்.
இதேவேளை, இந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற தந்தை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தற்கொலைச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment