Thursday, March 15, 2012

இலங்கை விவகாரத்தில் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு ?


LankaMuslim

ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமெரிக்கா துரிதமாக ஈடுபாட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அமெரிக்கா 100 அதிகாரிகளைக் அனுப்பி இலங்கை விவகாரம் தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவை உறுதி செய்துகொள்ளும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
அதேவேளை ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றவுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரியான அட்டுல் கெஷாப் நேற்று கொழும்பு வந்துள்ளதுடன் அமெரிக்கத் தூதரகத்தில் நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை

No comments:

Post a Comment