Monday, March 26, 2012

கடலில் ஆட்டோ ஓட்டி புதிய சாதனை!

யாழில் பெண் ஒருவர் ஓட்டிய முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பண்ணை வீதியில் மண்டைதீவு சந்திக்கு அருகில் பறவைகள் சரணாலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள கடலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இச் சம்பவம் இன்று (26) திங்கள் கலை இடம்பெற்றுள்ளது. 

கடலில் ஆட்டோ ஓட்டி புதிய சாதனை!இருந்தும் அதில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக சேதங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர். 


மகளிர் தினத்தன்று[???] 10 பெண்களுக்கு முச்சக்கரவண்டிகள் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டு அதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரமும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. 

இந்த 10 பெண்களில் ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Adadarana-

No comments:

Post a Comment