மாநிலத்தில் ஷரீஆவை சிறந்த முறையில் அமுல்படுத்த உள்ளதாக பல வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
‘‘இஸ்லாத்தின் கடந்த கால மகத்துவம் போல, வளமிக்க ஆச்சேயின் பொற்காலத்தை நோக்கி மீளத்திரும்புவோம்‘‘ என ஒரு வேட்பாளர் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என்ற கோரிக்கையை ஆச்சே பிரிவினைவாதிகள் முன்வைத்தனர்.
எனினும், தற்போது விரிவான தன்னாட்சி அதிகாரங்கள் அதற்கு வழங்கப்பட்டுள்ளது. 2001 இல் மத்திய அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே இது அமுலுக்கு வந்துள்ளது.
ஆச்சேயில் ஷரீஆ படிப்படியாக அமுல்படுத்தப்படுகிறது. இங்கு இஸ்லாமிய சட்டங்களை அவதானிப்பதற்கான தனியான பொலிஸாரும் உள்ளனர்.
No comments:
Post a Comment