Monday, March 19, 2012

சனல்- 4 தொலைக்காட்சியின் நிர்வாக பணிப்பாளரின் மனைவி இலங்கை தமிழ்ப் பெண்?



சனல் 4 வீடியோ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய இந்தப் பெண்மணி, சனல் 4 தொலைக்காட்சியின் நிர்வாகப் பணிப்பாளரை மணந்து லண்டனில் வசித்து வருவதாகவும், இவர் சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், விடுதலைப் புலிகள் அமைப்புகளுடனும் சேர்ந்து செயற்பட்டு வருவதற்கும், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை வெளிடுவதற்கும் இந்தப் பின்னணியே காரணமாக இருப்பதாக அரசாங்க ஊடகம் வெளியிட்டுள்ள அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Thank: Tamilw

No comments:

Post a Comment