Thursday, April 05, 2012

நிலையான சமாதானத்துக்காக எவ்வளவு தூரமும் பயணிக்கத் தயார் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுபவர்களின் முயற்சிகள் தோல்வி - ஜனாதிபதி




நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தொலைவுக்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.
பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிர லுக்கு இன்னும் உதவி வருகின்ற வர்களின் முயற்சிகள் தோல்வியுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். எக்ஸ்போ- 2012 சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு- 7 லுள்ள பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இக்கண்காட்சியில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, கொரியா உட்பட அறுபது நாடுகளைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கு பற்றியுள்ளனர்.
இந்தக் கண்காட்சியை அங்கு ரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந் தும் உரையாற்றுகையில், எமது நாட்டின் வர்த்தகத் துறையில் ஏற் பட்டு வருகின்ற பாரிய முன்னேற் றத்தில் நாம் அடுத்தபடி எடுத்து வைக்கவிருக்கின்றோம். இந்த முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்தில் நடைபெறும் இக்கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகப் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தற்போது இலங்கையில் புதிய அபிவிருத்தி நடைபெறுகின்றது. வர்த்தக முதலீடு மற்றும் முக்கியத்துவம் மிக்க பங்களிப்புகளுக்காக இலங்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்தினர் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்றி இருப்பதை நான் அறிவேன். வர்த்தகம், முதலீடு, சுற்றாடல் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பங்குபற்ற வருகை தந்துள்ள சகல வெளிநாட்டவர்களையும் அன்புடன் வரவேற்கின்றேன். இவ்வாறு பெருந்தொகை வர்த்தக சமூகத்தினரின் வருகையானது இந்நாட்டின் வர்த்தக துறையின் மேம்பாட்டில் சிறந்த வெளிப்பாட்டைக் காட்டுகின்றது.
இலங்கை தற்போது வர்த்தக நடவடிக் கைகளுக்காக முழுமையாக திறக்கப்பட்டு ள்ளது. இதனை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கையும் அவற்றின் வித்தியாசமும் நன்கு தெளிவுபடுத்தும்.
இந்த சந்தர்ப்பம் 15 வருடங்களுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. வர்த்தகம், முதலீடு உல்லாசப் பயணத்துறை மற்றும் அபிவிருத்தி என்பன ஒன்றாகக் கவரக்கூடியவையாக இணைந்து காணப்படுகின்றன. இவ்வாறு 15 வருட கால இடைவெளி ஏற்பட்டதற்கான காரணத்தை கூறுவதை பொருத்தமான தெனக் கருதுகின்றேன். இந்தக் காலப்பகுதியில் மிகக் குரூரமான பயங்கரவாதத்திற்கு முகம்கொடுத்தோம். இந்தக் காலப் பகுதியில் வெளிநாட்டவரி டமிருந்து சில உதவிகளை பெற்று வந்த பயங்கரவாத சக்திகளின் செயற்பாட்டி னால் வர்த்தக நடவடிக்கைகளும் எம்மை விட்டு தூரமாகி இருந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான நெருக்கடி இப்போது முடிவுற்றுள்ளது என்பதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம். நீங்கள் சுதந்திரமாக நடமாடும்போது இவற்றை உங்களால் பார்க்கவும், உணரவும் முடியும். அது உண்மையாகவே முடிந்துள்ளது.
பிரிவினைவாதமும் வன்முறைச் சக்திகளும் மீண்டும் அவற்றின் குரூர தலைகளை தூக்குவதற்கு எமது தாயகத்தில் எங்கும் நாம் இடமளிக்கமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக் கின்றேன். இலங்கை மிக அர்ப்பணிப்புடன் வென்றெடுத்த சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையில் முன்னோக்கி செல்லுகின்றோம்.
நல்லிணக்கத்தின் ஊடாக நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தேவைப்படும் எந்தத் தூரத்திற்கு செல்லவும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இது எமது மக்களுக்காக எமக்குள் ஏற்பட்டிருக்கும் அர்ப்பணிப்பாகும். இதனை எப்படி செய்யவேண்டும்? எந்த முறையில் மேற்கொள்ளவேண்டும் என்றும் எவரும் எமக்கு சொல்லித் தரத்தேவை இல்லை.
நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுற்றுள்ளது. தேவையற்ற கடும் ஒழுங்குவிதிகள் ஊடாக போட்டி வர்த்தக துறை மட்டுப்படுத்தப்படாது திறந்து விடப்பட்டுள்ளது. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் அரச தலைவரின் கீழ் தனியார் துறையின் முழுமையான பங்களிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் பயனாக தற்போது எமது நாட்டில் இப்பிராந்தியத்திலேயே தனித்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடு இரு மடங்காக அதிகரித்தது. அத்தோடு இவ்வருடமும் கொழும்பு பங்குச் சந்தையின் அண்ணளவான முதலீடுகளைப் போல வணிக வங்கிகளின் முதலீடுகளும் அதிகரித்துள்ளன.
இந்தக் கண்காட்சியில் 370 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறிய, மத்திய அளவிலான கைத்தொழில் துறையினர் பங்குபற்றியுள்ளனர். இவர்களில் 25 வகையைச் சேர்ந்தவர்கள் இறக்குமதி துறையைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மேற்கொள்ளும் இறக்குமதி நடவடிக்கை களால் இந்நாட்டில் பொருளாதாரம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இப்பிராந்தியத்திலேயே இலங்கை வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளில் தற்போது கேந்திர நிலையமாக மாறியுள்ளது. என்றாலும் வெகு விரை வில் இலங்கை ஆசியாவின் கேந்திர நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
கடந்த முப்பது வருடகாலத்தில் இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டிருந்தது. பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இன்னும் உதவி வருகின்றவர்களின் முயற்சிகள் தோல்வி யுற்று இருப்பதையே உங்களது வருகை எமக்கு உணர்த்துகின்றது என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், கலாநிதி சரத் அமுனுகம, டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா வன்னியராச்சி, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. எச். எம். அஸ்வர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment